Thursday, August 30, 2007

இரண்டு மலக்கவிதைகள்

மோகனுக்கு கவிஞனாக ஆசை வந்தது.
மோகன் என்றால் மோகமெல்லோ?
கவிஞனுக்குக் காதலி கிடைப்பாள்
கைதட்டும் விட்டுவிட்டுக் கிடைக்கும்

நிர்மலத்தின் உட்கூறு பிளந்து ஒரு கவிதை போட்டான்
ஆஹா என்றார்கள் சமயவாதிகள்
தன்மலத்தின் புறக்கூறு பிரித்து ஒரு கவிதை போட்டான்
ஓஹோ என்றார்கள் சமூகவாதிகள்

சமயவாதிகளும் சமூகவாதிகளும் நியாயவாதிகள்
சமயவாதி என்றால் மித்ரர். சமூகவாதி என்றால் தோழர்
ஆஹாவும் ஓஹோவும் அறிஞன் ஆக்கும்
அறிஞர் மோகன்

கவிதை?
முழங்காலால் முறித்து
குசினி அடுப்பில் போடு

அறிஞர் >>> கவிஞர்


தீ பரவட்டும்

Comments: Post a Comment



Home

This page is powered by Blogger. Isn't yours?