Friday, August 31, 2007

புஷ்பராணி சாமர்த்தியப்பட்ட கவிதை

புஷ்பராணி சாமத்தியப்பட்ட கவிதை கேள்விப்பட்டு
புஷ்பத்தின்ரை தெரு தெரியாதவையும்
படலையைத் தள்ளிக்கொண்டு வந்து கேட்டினம்
எப்ப நடந்தது?
எப்ப சடங்கு?



சடங்கு நாங்கள் வைக்கிறதாய் இல்லை



புஷ்பம் அழுதாள்
எனக்குச் சடங்கு வைக்கோணும்


உன்ரை இஷ்டப்படி நடக்கேலாது
உது பெட்டையளை அடக்கிற விசயம்
சடங்கு வைக்கப்படாது

உவள் நினைச்சபடி நடக்கவிடமாட்டன்
உது வெக்கக்கேடெண்டு கவிதையள் எழுதியிருக்கிறன்
சடங்கு இருக்கப்படாது

நடந்துதோ இங்கை ஒரு கொலையே விழும்
சனம் சாகுது. ஆட்டக்காரிக்குச் சாமத்தியவீடாம்
சடங்கு நடக்கப்பிடாது


பிள்ளை இந்தக்காலத்துப்பெட்டை
சாமத்தியச்சடங்கு வெக்கக்கேடெண்டுறாள்.
வேண்டாமாம்.


வந்தவை சாமத்தியக்கவிதை முடியமுன்னம்
படலையைச் சாத்தாமப் போச்சினமாம்.
ப்ச்! இப்பத்தையப் பெட்டையள்!
கலாச்சாரத்தையே மறந்துபோட்டு ஆடுகிறாளுவை



அறைஞ்சனெண்டால், நாயே!
வெக்கமில்லையே உனக்கு?
சாமத்தியச்சடங்கு கேக்குதோ?
ஏன், ஊருக்கெல்லாம் அறிவிச்சுப்போட்டு
ஆரோடையும் ஓடிப்போகப்போறியே!



புஷ்பம் அழுதாள்
எனக்குச் சடங்கு வைக்கோணும்



புஷ்பராணி சாமத்தியப்பட்ட கவிதை கேள்விப்பட்டு
புஷ்பத்தின்ரை தெரு தெரியாதவையும்
படலையைத் தள்ளிக்கொண்டு உள்ளை வந்தினம்

Comments: Post a Comment



Home

This page is powered by Blogger. Isn't yours?